Sunday, 2 October 2011

உள்ளாட்சித்தேர்தலில் பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சிகள் கைகோர்த்தது!





தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து தனி அணியாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.


இந்தக் கூட்டணியில்

1. தமிழ் நாடு ஜமாத்துல் உலமா சபை

2. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

3. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா

4. இந்தியன் நேஷனல் லீக்

5. சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை

6. தேசிய லீக் கட்சி

7. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்

8. ஜம்மியதுல் உலமாயே ஹிந்த்

9. ஆல் இந்தியா மில்லி கவுன்சில்

10. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்

11. ஷரிஅத் பாதுகாப்பு பேரவை

12. வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா

13. இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம்

14. இஸ்லாமிய இலக்கிய கழகம் ஆகிய அமைப்புகளும், 6 கிறிஸ்துவ அமைப்புகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை உள்ளன.







மொத்தமுள்ள 9 மாநகராட்சி மேயர் பதவிகளில், சென்னை உள்பட 3 மாநகராட்சிகளில் இஸ்லாமிய கூட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 மாநகராட்சிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும்.


சென்னை மாவட்ட மேயர் வேட்பாளர் அமீர்

மேயர் தொகுதிகளில் மட்டும்தான் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி, கவுன்சிலர், வார்டுகளில் யாருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறதோ அவர்கள் போட்டியிடுவார்கள்





சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI)வின் வட சென்னை மாவட்டத் தலைவர் S.அமீர் போட்டியிடுகிறார்.

No comments:

Post a Comment