Friday, 23 March 2012

கர்நாடக முதலமைச்சர் பதவியில் தற்போது மாற்றம் இல்லை – சதானந்தா கவுடா


சதானந்தா கவுடா
பெங்களூரு:கர்நாடகாவில் முதலமைச்சரை தற்போதைக்கு மாற்றப் போவதி்ல்லை என கட்சி மேலிடம் தன்னிடம் தெரிவித்திருப்பதாக அந்த மாநில முதலமைச்சர் சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பதவி தொடர்பாக பா.ஜ.க. மேலிடம் அழைப்பின் பேரில் டெல்லி சென்ற சதானந்தா கவுடா, மீ்ண்டும் பெங்களூரு திரும்பிய பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
ஊடகங்களில் எடியூரப்பா முதலமைச்சராக நியமிக்கப்பட உள்ளார் என்று வெளியான செய்தி தவறு என்றும், தானே முதல்வராக தொடர்வதாகவும் சதானந்த கவுடா கூறியுள்ளார். இதேபோல், டெல்லியில் இருந்து பெங்களூரு திரும்பிய எடியூரப்பா, செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதைய கர்நாடக அரசியல் சூழ்நிலைகள் குறித்து மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும், தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை மகிழ்ச்சிகரமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment